சர்வதேச சமாதான சுட்டெண் தரப்படுத்தலில் இலங்கை!
Monday, June 19th, 2017சர்வதேச சமாதான சுட்டெண் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் முன்னெடுக்கப்படும் நல்லாட்சியில் பல ஆரோக்கியமான அரசியல் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.
நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளன. அந்தவகையில், 163 உலக நாடுகள் மத்தியில் இலங்கை 80 ஆவது இடத்தை அடைந்துள்ளது. கடந்த வருடத்தோடு ஒப்பிடப்படுமிடத்து இலங்கை 17 நிலைகளால் முன்னேற்றம் கண்டுள்ளது.
உலக சமாதான சுட்டெண் தரப்படுத்தில் ஐஸ்லாந்து முதலாவது இடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியாவின் பொருளாதார மற்றும் சமாதான ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றினால் இந்த சர்வதேச சமாதானம் தொடர்பான சுட்டெண் தரப்படுத்தல் வரிசை வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!
விவசாயத்தை நவீனமயமாக்குவதற்கு செயலணியொன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
அதிகாரப் பகிர்வால் நாடு பிளவுபடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - தங்களை, தாங்களே ஆளும் மனநிலை தமிழ்...
|
|