ஆகஸ்ட் மாதம்முதல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறை அறிமுகம் – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, June 11th, 2021

வீட்டிலிருக்கும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை மிக நெருக்கமடையச் செய்யும் புதிய கற்றல் முறையொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் வேலைத்திட்டமொன்றை மேற்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்முதல் இந்த புதிய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இணைய வழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் மாணவர்கள் அதே வழியில் திறனை வளர்த்துக் கொள்கிறார்களா என்ற பிரச்சினையின் காரணமாக இந்தப் புதிய முறையொன்றை அறிமுகப்படுத்துவதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: