அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி தகவல்!

Saturday, July 1st, 2023

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலர் மட்டுமன்றி ஏனைய பிரதான நாணய பெறுமதிகளுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அஸ்திரேலிய டொலருடன் ஒப்பிடும்போது ரூபாவின் பெறுமதி 19.8 சதவீதமும், யூரோவுடன் ஒப்பிடும்போது 14.5 சதவீதமும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்திய ரூபாவுடன் ஒப்பிடும்போது 16.5 சதவீதமும் ஜப்பானிய யெனுடன் ஒப்பிடும்போது 27.7 சதவீதமும் ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

வெளிநாட்டு நாணயங்களை அனுமதியின்றி விற்பனை செய்ய முடியாது - இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!
அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன் - முடியாவிட்டால் விலகி செல்வேன் - பிரதமர் ...
முதலாவது மீளாய்வு நடவடிக்கை வெற்றிகரமாக முடிவடைந்தால் பொருளாதார மீட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்கும...