இலங்கையிலிருந்து விண்ணுக்கு இரண்டு செய்மதிகள்!
Tuesday, January 30th, 2018
இலங்கையில் இருந்து முதல் முறையாக இரண்டு தொடர்பாடல் செய்மதிகள் விண்ணுக்கு ஏவப்படவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நெனோ தொழிநுட்பத்துடனான செய்மதியொன்று ஜப்பானின் கியூடெக் நிறுவனத்தின் உதவியுடன் ஏவப்படுவதாகவும் 2020ஆம் ஆண்டு ரஷ்யாவின்உதவியுடன் அடுத்த செய்மதியும் விண்ணில் ஏவப்படவுள்ளது என ஆதர் சி கிளார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்புவதற்கு விவசாயம், தொடர்பாடல், நீர்வழங்கல் மற்றும் சூழலியல் துறைகள் தொடர்பில் முக்கியஅவதானம் செலுத்தப்பட வேண்டும் என அந் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
டெங்கு ஒழிப்பு தொடர்பில் விசேட பிரிவு - ஜனாதிபதி
இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்றுக்கு – இதுவரை 210 போர் உறுதிப்படுத்தப்பட்டனர்!
இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயர் - சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு!
|
|