கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் ஆபத்து – விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் எச்ரிக்கை!
Monday, June 14th, 2021
இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த சில நாட்களிலும் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இதன்போது அவர் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கு தேவையாக உள்ளது - சுதந்த...
கொரோனாத் தொற்றினால் இதுவரை 67 சிறுவர்கள் உயிரிழப்பு - ஒரு மாதத்திற்கும் குறைவான 17 சிசுக்களும் பலி எ...
விசாகப் பூரணை தினத்தை முன்னிட்டு 988 கைதிகளுக்கு பொது மன்னிப்பு - சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிப்ப...
|
|
|


