ஊழியரின் தாமதத்தினால் ஶ்ரீலங்கன் விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதம்!
Saturday, August 20th, 2016விமான சேவை ஊழியர் ஒருவரின் வருகைக்கு தாமதம் ஏற்பட்டதால் ஃபிராங்ஃபர்ட்டில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த ஶ்ரீலங்கன் விமானம் 15 மணித்தியால தாமதத்தின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்திலிருந்த நேற்று பிற்பகல் புறப்படவிருந்த நிலையில், விமான ஊழியரின் தாமதத்தினால், இன்று காலை வரை இந்த விமானத்தை விமான நிலையத்திலேயே நிறுத்திவைக்க நேரிட்டுள்ளது.
ஃபிராங்ஃபர்ட் விமான நிலையம் இரவு வேளையில் மூடப்படுவதால், மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட விமானம் கொழும்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
Related posts:
வரலாற்று பதிவான ஹர்த்தாலால் முடங்கிய இரத்தினபுரி!
யாழ்ப்பாணத்தில் மேலும் அதிகரித்த கொரோனாத் தொற்று – சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தகவல்!
இரசாயன பசளைகள் - பூச்சிக்கொல்லிகளை சந்தையில் நிரம்பல் செய்ய அரசாங்கம் உத்தரவு!
|
|