கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை – அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Sunday, July 11th, 2021

நாட்டில் எதிர்வரும் வாரத்தில் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்துள்ளார்..

எதிர்பார்த்தப்படி சீனாவில் இருந்து 20 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் இன்று காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.

இதேபோன்று மேலும் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் மற்றுமொரு தொகை தடுப்பூசிகள் இந்த மாதத்தின் 3ஆவது வாரத்தில் நாட்டிற்குக் கிடைக்கவிருப்பதாகவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்..

அதேநேரம் செப்டெம்பர் மாதத்தை அண்மிக்கும்போது நாட்டில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி ஏற்றும் பணியை பூர்த்தி செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது எனவும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: