சிறுவர் துஸ்பிரயோக செய்திகளை வெளியிட வேண்டாம் – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!
Thursday, June 30th, 2022
70 வயதான முதியவர் ஒருவர் 6 வயதுடைய ஒரு குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அதனை ஊடகங்களில் செய்தியாக வெளியிட வேண்டாம் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலூம், நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்பதே சமூகத்தின் கருத்தாக இருக்கின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களை இல்லாதொழிப்பதன் மூலம் நெருக்கடியை தீர்க்க முடியாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் பொதுமக்களுக்கு தெளிவூட்டுவதன் மூலம் இந்த நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சிறந்த இடதுசாரி ஊடகப் போராளியை சமூகம் இழந்துவிட்டது! - டக்ளஸ் தேவானந்தா
புலம்பெயர்ந்தவர்களால் பில்லியன்களை வருமானமாக பெறும் இலங்கை!
மந்தகதியில் யாழ் மாவட்ட பொலிசாரின் செயற்பாடுகள் - நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றச்சாட்டு - பொல...
|
|
|


