சேவை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவிப்பு!
Tuesday, September 12th, 2023பிரதேச செயலக அலுவலகங்கள் மற்றும் பிரதேச சபைகள் ஊடாக சேவைகளை வழங்குவதில் அறவிடப்படும் கட்டணங்களை ஒன்லைன் முறைகளில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிடுகின்றார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து அரச நிறுவனங்களிலும் இணையவழி முறையில் பணம் செலுத்தும் முறையை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பல நிறுவனங்களை மையப்படுத்தி அதற்கான முன்னோடி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
தொலைத்தொடர்பு சேவைகள் மீதான வரிக் கட்டணம் நீக்கம்!
முகக்கவசம் அணிவதால் 70 சதவீதத்தைக் கட்டுப்படுத்த முடியும் - சுகாதார அமைச்சு!
சீன பாதுகாப்பு அமைச்சருக்கு இலங்கை கலாசார மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பு!
|
|