யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் கவனத்திற்கு!
Monday, September 26th, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் தங்களது பதிவுகளை உடனடியாகக் கல்லூரியில் பதிவு செய்யுமாறு அதிபர் கேட்டுள்ளார்.
குறிப்பிட்ட மாணவர்களின் பெயர் விபரம் கல்லூரியின் பெயர்ப் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மேற்படி மாணவர்களை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம்-09 ஆம் திகதி இடம்பெறவுள்ள வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் அதற்கு வசதியாக நாளை-27 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பெயர் மற்றும் தத்தமது துறைகள் தொடர்பான விபரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
Related posts:
பச்சிளங் குழந்தையை கைவிட்ட தாய் கைது!
ஆட்கடத்தல்களுடன் தொடர்புடைய நபர் கைது!
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நல்லூரில் இலவச யோகாசன மற்றும் தியான வகுப்புக்க...
|
|