யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர் கவனத்திற்கு!
Monday, September 26th, 2016
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு க.பொ. த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிப் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான மாணவர்கள் தங்களது பதிவுகளை உடனடியாகக் கல்லூரியில் பதிவு செய்யுமாறு அதிபர் கேட்டுள்ளார்.
குறிப்பிட்ட மாணவர்களின் பெயர் விபரம் கல்லூரியின் பெயர்ப் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மேற்படி மாணவர்களை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம்-09 ஆம் திகதி இடம்பெறவுள்ள வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் அதற்கு வசதியாக நாளை-27 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பெயர் மற்றும் தத்தமது துறைகள் தொடர்பான விபரத்தை உறுதி செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

Related posts:
ரவிராஜ் படுகொலை வழக்கு: அறுவருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை!
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு!
இலங்கையின் பொருளாதார மீளெழுச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் - ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜப்பான் தூத...
|
|
|


