யாழில் நெற்செய்கையில் 50 வீத அறுவடைப் பணிகள் முழுமை!
Thursday, February 1st, 2018யாழ்ப்பாணக்; குடாநாட்டில் பெரும்போக நெற்செய்கையில் இதுவரைக்கும் 50 வீதத்துக்கும் அதிகமான அறுவடை நிறைவு பெற்றுள்ளது.
தொடர்ந்தும் நெல் அறுவடை செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என விவசாயத் திணைக்களம் தெரிவித்தது. கடந்த இரு நாள்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை வேறுபாட்டால் அறுவடை செய்யப்படவில்லை. தொடர்ந்து நேற்றிலிருந்து விவசாயிகள் அறுவடையில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.
அறுவடை செய்யப்படும் நெற் பயிர்கள் உடனடியாக இயந்திரம் மூலம் நெல்லாக மாற்றப்படுகிறது. கடந்த வருடத்தின் இறுதியில் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அநேகமான செய்கையாளர்களுக்கு பெரும் நஸ்டம் ஏற்பட்டது. கடுமையான வறட்சிக்குப் பின்னர் மழை பெய்து கொடுத்ததால் அந்தப் பயிர்கள் ஒருவாறு தப்பித்துக்கொண்டன.
Related posts:
முத்துராஜவெல ஈரநில பாதுகாப்புக்காக 100 மில்லியனை வழங்க சுற்றாடல் அமைச்சு தீர்மானம்!
சில பரிந்துரைகளை, இலங்கை ஏற்கனவே அமுல்படுத்தியுள்ளது - சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கைக்கு மத்திய வ...
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை!
|
|