நாடு முழுவதும் வேகமாக பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் – இதுவரை 15 பேர் மரணம் – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை எச்சரிக்கை!

Wednesday, April 12th, 2023

நாடு முழுவதும் இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாசப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி போன்றவை இதன் அடிப்படை அறிகுறிகளாகுமென விசேட வைத்தியர் பிரியங்கர ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தின் கடந்த மூன்றரை மாதங்களில் எலிக்காய்ச்சல் காரணமாக 15 பேர் உயிரிழந்துள்ளதாக காலி மாவட்ட தொற்றுநோய் நிபுணர் எரந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

இலங்கை- பாகிஸ்தான் வர்த்தக பெறுமதியை 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க முயற்சி!
ஊழியர்கள் ஒன்றாக இணைந்து உணவு உண்ண வேண்டாம் - அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கு சுகாதார பரிசோதகர...
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் தொழிற்கல்வி பாடங்களுக்காக மாணவர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் கோரல்...