பிரான்ஸில் இலங்கைத் தமிழ்ப் பெண் மருத்துவரானார்!
Monday, July 9th, 2018
இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் பிரான்ஸில் முதல் தடவையாக மருத்துவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டுக்கான மருத்துவர்களுக்கான பட்டமளிப்பு விழா கடந்த மாதம் நடைபெற்றது. இதன் போது நான்சி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மாணவர்கள் 300 பேருக்கு மருத்துவர் பட்டம் வழங்கப்பட்டது. இதில் இலங்கையைச் சேர்ந்த சிநேகிதா ஸாகரியும் பட்டம் பெற்றார்.
இவர் பிரான்ஸ் மெட்ஸ் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களான சுந்தரவடிவேல்பிள்ளை சந்திரவதனி ஆகியோரின் புதல்வி ஆவார்.
இலங்கையில் ஆரம்ப கல்வியை ஆங்கில மொழியில் தொடர்ந்த சிநேகிதா, பிரான்ஸிற்கு குடிபெயர்ந்த நிலையில் பிரெஞ்சு மொழியில் தனது படிப்பைத் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது.
2008 ஆம் ஆண்டு மெட்ஸ் நகரிலிருந்த கல்லூரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 28 சிறந்த மாணவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
Related posts: