மூன்று பயணிகளே முச்சக்கர வண்டியில் பயணிக்கலாம் !
Saturday, March 5th, 2016முச்சக்கர வண்டிகளில் மூன்று பிரயாணிகளுக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவது தடைசெய்யப்பட்டுள்ளதோடு இச்சட்டத்தை மீறி வண்டியினை செழுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அமரசிறி சேனாரத்ன தெரிவித்தார்.
கடந்தக்காலங்களில் நாடளாவிய ரீதியில் நடைபெற்ற வீதி விபத்துகளில் முச்சக்கர வண்டி சாரதிகளின் கவனயினத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிகாட்டினார்.
எமது நாட்டில் நாடளாவிய ரீதியில் பாதைகளில் பயணிக்கும் முச்சக்கரவண்டிகளில் பிரயாணிகளை ஏற்றுவது தொடர்பில் பொலிஸார் இன்று முதல் கடுமையான சுற்றிவலைப்புகளை முன்னெடுப்பது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே போக்குவரத்து பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Related posts:
அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு இந்திய அழைப்பு!
மாணவர்களின் உள ஆரோக்கியம் தொடர்பில் கல்விச் சமூகம் அக்கறை கொள்ளவேண்டும் - யாழ் பிராந்திய சுகாதார சேவ...
600 சிறைக்கைதிகள் விடுவிப்பு!
|
|