உயர் பெறுமதியினை அடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை !
Sunday, February 24th, 2019சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வருடத்தின் உயர் பெறுமதியினை அடைந்துள்ளது.
அதன்படி, கடந்த வாரத்தினுள் எண்ணெய் விலை நூற்றுக்கு 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
ஒபெக் அமைப்பினால் எண்ணெய் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமை தீர்க்கப்படும் என நிலவும் எதிர்ப்பார்ப்பும் எண்ணெய் விலை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தியுள்ளது.
அதன்படி , ப்ரண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை வார இறுதியில் 67 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நீரில் மூழ்கி யாழில் இருவர் உயிரிழப்பு!
இலங்கையின் வான்பரப்பில் பயணித்த சர்வதேச விண்வெளி நிலையம்!
அபாயக் கட்டத்தில் யாழ்ப்பாணம் – எச்சரிக்கை அவசியம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறனர் சுகாதார அதிகா...
|
|