புகையிரதத்திலிருந்து தவறி விழுந்த அவுஸ்திரேலிய பிரஜை பலி!

Sunday, March 12th, 2017

கொழும்பிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து அவுஸ்திரேலிய பிரஜைபொருவர் உயிரிழந்துள்ளார். அலவ்வ வலகுபுர பகுதியில் வைத்து குறித்த அவுஸ்திரேலிய பிரஜை தவறி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் உயிரிழந்த அவுஸ்திரேலிய பிரஜையின் சடலம் பொல்கஹாவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts: