பெற்றோல் – டீசலை விடுவிக்கும்போது நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது – இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தகவல்!

Sunday, February 6th, 2022

பெற்றோல் மற்றும் டீசல் என்பனவற்றை சந்தைக்கு விடுவிக்கும்போது, தொடர்ந்தும் நட்டத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக, இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் டீசல் லீட்டர் ஒன்றிற்கு 36 ரூபாவினாலும், பெற்றோல் ஒரு லீட்டருக்கு 8 ரூபாவினாலும் நட்டம் ஏற்படுவதாக அதன் தலைவரான சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் உடனடியாக தீர்வை வழங்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தெளிவுபடுத்தியதாகவும் அவர் தெரவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: