இலங்கையின் பல பகுதிகள் குளிரில் மூழ்கும் அபாயம்!
Friday, January 19th, 2018இலங்கையில் இரவு மற்றும் காலை வேளைகளில் பல பகுதிகளில் உலர் வானிலையுடன் குளிரான காலநிலையும் நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம்தெரிவித்துள்ளது.
இதேவேளை நுவரெலியாவில் எதிர்வரும் இரு நாட்களுக்கு உறைபனி பொழியும் சாத்தியம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓரளவு பலத்த காற்று வடக்கு வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை அம்பாறை மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் திடீரென வீசும்வாய்ப்புள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் பிற்பகல் 2.00 மணிக்கு பிறகு அதிகமான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்பதுடன், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வட மத்திய மற்றும்தென் மாகாணங்களில் காலை வேளையில் பனி நிலைமை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சுன்னாகம் நீர் மாசு விவகாரம்: வடமாகாண சபை விவசாய அமைச்சரை நீதிமன்றில் ஆயர்!
இடமாற்றப் பட்டியல் வெளியானது!
18 மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் நியமனம் - நியமனக் கடிதங்கள் பிரதமரினால் வழங்கி வைப்பு!
|
|