நல்லூர் பிரதேச சபையின் எல்லைக் குட்பட்ட பகுதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட  மதில்கள் இடித்து அழிப்பு

Saturday, April 2nd, 2016

சபையின் அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில்  அமைக்கப்பட்டிருந்த இரு மதில்கள் இடித்து அகற்றப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி வளாக வீதி அண்மையில் புனரமைக்கப்பட்ட போது குறித்த வீதி மற்றும் கொக்குவில் பகுதி அம்மன் வீதி ஆகிய பகுதிகளில் உரிய அனுமதியின்றியும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் அமைக்கப்பட்டிருந்த மதில் பிரதேச சபையின் பைக்கோ வாகனம் மூலம் இடித்து அகற்றப்பட்டுள்ளன.

சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள வீதியோரங்களில் மதில்கள் அமைக்கும் போது உரிய அனுமதியை முன்கூட்டியே  பெற்று  அமைக்குமாறும், தவறும் பட்சத்தில் அவ்வாறு அமைக்கப்படும் மதில்கள் உடனடியாக இடித்து அகற்றப்படுமெனவும் நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் மேலும் எச்சரித்துள்ளார்.

Related posts: