இன்று பெரிய வெள்ளி தினம்!
Friday, April 10th, 2020இன்று பெரிய வெள்ளி தினமாகும். உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்றையதினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர். இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.
இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற வகையில் வீடுகளில் இருந்தே ஆராதனைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு ஆயர் இல்லம் கேட்டு கொண்டமை குறிப்பிடதக்கது.
Related posts:
திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் குறைந்த வாக்காளர் எண்ணிக்கை பதிவு !
புதிதாக கண்டுபிடிக்கப்படும் பெரும்பாலான தொல்பொருள் சேதமாக்கப்படுவது கவலையளிக்கிறது - தொல்பொருள் திண...
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்...
|
|