பிசிஆர் பரிசோதனைக்கு மறுத்த யாழ் நகர வர்த்த நிலையம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டது!

Saturday, January 9th, 2021

யாழ் நகர் நடைபாதை அங்காடியில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காத வர்த்தக நிலையம் ஒன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தகநிலையம் இன்று யாழ் மாநகர சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அங்கு கடமையாற்றும் 3 ஊழியர்களும் குடும்பத்துடன் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

கடந்த வாரம் யாழ்ப்பாண நகர நடைபாதை அங்காடி வர்த்தகர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எனினும் குறித்த வர்த்தக நிலையத்தில் உள்ளவர்கள் பிசி ஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காததனால் இன்றையதினம் அவர்கள் கட்டாய சுயதனிமைப்படுத்தலுக்கு உப்படுத்தப்பட்டுள்ளனர்.

000

Related posts:


முட்டை விலை அதிகரிப்பு - நிர்ணய விலையொன்றை அறிவிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரிகள் உற்பத்தியாளர்கள...
கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும் - விமண்டலவியல் திணைக்களம் எச...
அமைச்சர் பந்துல குணவர்தன துபாய் பயணம் - இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்துறை பேச்...