அமைச்சர் பந்துல குணவர்தன துபாய் பயணம் – இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில் பல்துறை பேச்சுக்களுக்கும் ஏற்பாடு!
Wednesday, February 16th, 2022இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (16) காலை துபாய் நோக்கி பயணமாகியுள்ளார்.
அமைச்சரின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் கலாநிதி தானி பின் அஹமட் அல் – செயுதியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்திப்பை தொடர்ந்து, அமைச்சர் தலைமையில் இலங்கை ஏற்றுமதி வர்த்தக நாமங்கள் தொடர்பான மூன்று நாள் வர்த்தக கண்காட்சி நாளை (17) திறந்து வைக்கப்படுமென வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணம் – பொன்னாலை வீதி அகலிப்பிற்காக காணி சுவீகரிப்பு!
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பண்டிகைக் கால வருமான பல மில்லியன்களால் அதிகரிப்பு!
இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும் - ஆசிய அபிவிருத்தி வங்...
|
|