அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களை முன்னெடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு பிரதமர் ஆலோசனை!
Tuesday, March 9th, 2021அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வெற்றிகரமான திட்டங்களைத் முன்னெடுக்குமாறு நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்யுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கையில் அந்நிய செலாவணி ஊடாக செயற்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தலைவர்களுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக் கொள்ளும்போது அந்தக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவது குறித்து கவனத்திற்கொண்டு வெற்றிகரமான திட்டங்களை மாத்திரம் செயற்படுத்துமாறு ஆலோசனை வழங்கிய பிரதமர், அத்திட்டங்களின் ஊடாக அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடல்வள பல்கலைக்கழகத்திற்கான திட்டம் குறித்தும் இதன்போது பிரதமர் விசேட கவனம் செலுத்தியதுடன் குறித்த பல்கலைக்கழக திட்டத்தை அதனை அண்மித்த பிரதேசங்களின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு செயற்படுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|