இலங்கையில் தேசிய அடையாள அட்டை பாவனையில் புதிய நடைமுறை – ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவிப்பு!

Friday, November 6th, 2020

தேசிய அடையாள அட்டையின் தகவல்களை இணைய முறை ஊடாக சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்பதிவு திணைக்களம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடைய அட்டை செயற்பாட்டிற்கு இந்த திட்டத்தை இடைக்கால தீர்வாக அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளதாகவும்  திணைக்களத்தின் ஆணையாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள வங்கிகள், நிதி நிறுவனம், அரச கூட்டுத்தாபனம், அரசியலமைப்பு சபை, அரசாங்கத்திற்கு இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அல்லது எழுத்துப்பூர்வ சட்டத்தின் கீழ் இலங்கையில் நிறுவப்பட்டுள்ள நிறுவனங்களில் தேவைகளை பூர்த்தி செய்யும் போது வாடிக்கையாளரின் விருப்பப்படி மட்டுமே அடையாள அட்டை தகவல்களை சான்றளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் வாடிக்கையாளர்களின் தகவல்களை சான்றளிப்பதற்காக குறித்த நிறுவனங்களினால் ஆட்பதிவு திணைக்களங்களுடன் முழுமையான ஒப்பந்ததிற்கு வர வேண்டும்.

தனிப்பட்ட அடையாளத்தை நம்பகத்தன்மையுடன் சரி பார்க்கவும், தேசிய அடையாள அட்டையை தவறான பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பல்வேறு மோசடிகளை தடுப்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: