தெங்கு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!
Thursday, December 22nd, 2016வீட்டுத்தோட்ட தெங்கு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வளவ பிரதேசத்தில் பத்து இலட்சம் தென்னங் கன்றுகளை நடுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை தெங்கு உற்பத்தி சபை முன்னெடுத்துள்ளது.
குடும்பம் ஒன்றுக்கு ஐந்து தென்னங்கன்றுகள் வீதம் 20 ஆயிரம் விவசாய குடும்பங்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கப்படவுள்ளன. உடவளவ, சந்திரிகா குளம், பனாமுரே போன்ற பிரதேசங்களில் வீட்டுத்தோட்ட தெங்கு உற்பத்தி நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெறுவதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த தெங்கு உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இரசாயன பூச்சிக்கொல்லிகள் அல்லது இரசாயன உரத்தை பயன்படுத்தாது சேதன பசளையை மாத்திரம் பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
Related posts:
பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்கள் போராட்டம்!
சிறுமி கடத்தல் - தமிழ் நாட்டில் 7 பேர் கைது!
இராஜதந்திர உறவுகளையும் எமது வாழ்வாதாரத்!தையும் பாதிக்காத வகையில் - இந்திய கடற்றொழிலாளர் விகாரத்திற்க...
|
|