கோத்தா வந்தால் நான் வெளியேறுவேன் – முன்னாள் ஜனாதிபதி!
Tuesday, June 7th, 2016
கோத்தபாய ராஜபக்சவை அதிகாரத்துக்கு கொண்டுவர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிமுயற்சிக்குமானால் தாம் அரசாங்கத்துடன் இணைந்திருக்கப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரனாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம், நாட்டை கொள்ளையிட்டவர்களை விரட்டுவதற்காகவேஅமைக்கப்பட்டது. இந்தநிலையில் கோத்தபாயவை அதிகாரத்துக்கு கொண்டு வர முயற்சித்தால், தாம்,அரசாங்கத்துடன் தொடரப் போவதில்லை என்று சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
அத்தனகலையில் வார இறுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர்இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தாம் முடமாகிப் போயுள்ளதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டதாககுறிப்பிட்ட சந்திரிக்கா, தற்போது தாம் முடமாகி உள்ளேனா? என்பதை பார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமை...
வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் பாடசாலை – முதலாம் தவணை பரீட்சை நடத்தப்படமாட்டாது - கல்வி அமைச்சு அறிவி...
வடக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் பலமான மின்னல் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
|
|
|


