நாளையுடன்  மழை குறைவுவடையும்?

Saturday, November 5th, 2016

தென் கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தென் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் விசாகப்பட்டினத்துக்கு 300 கிலோ மீட்டருக்கு அப்பால் நிலை கொண்டு இருந்த புயல் சின்னம் வட மேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தில் கரையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கக் கடல் பரப்பில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால் தமிழக வட மாவட்டங்களில் நேற்று வறண்ட வானிலை நிலவியது என்றும் நாளை மழை குறைவடையும் என்றும் சென்னை வானிலைநிலையம் அறிவித்துள்ளது.

b55e36f0ff711c67693123d067cef864_XL

Related posts: