நாளையுடன் மழை குறைவுவடையும்?
Saturday, November 5th, 2016தென் கிழக்கு வங்கக் கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தென் மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடலில் விசாகப்பட்டினத்துக்கு 300 கிலோ மீட்டருக்கு அப்பால் நிலை கொண்டு இருந்த புயல் சின்னம் வட மேற்கு திசையில் நகர்ந்து வங்கதேசத்தில் கரையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கக் கடல் பரப்பில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்படுவதால் தமிழக வட மாவட்டங்களில் நேற்று வறண்ட வானிலை நிலவியது என்றும் நாளை மழை குறைவடையும் என்றும் சென்னை வானிலைநிலையம் அறிவித்துள்ளது.
Related posts:
அடுத்த மாதம் முதல் இணைந்த நேர அட்டவணை! மீறுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை!
தேங்காய் விலை தொடர்பில் நடவடிக்கை!
மின்னல் ஏற்படும் போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தொடர்பில் வானிலை மையம் அறிவுறுத்தல்!
|
|