யானை தாக்கி யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் மரணம்!
Monday, July 20th, 2020யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்த தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான 32 வயதுடைய காயத்திரி டில்ருக்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விரிவுரையாளர் விடுதியில் தங்கியிருந்த நிலையில் குறித்த பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் அப்பகுதியில் நேற்று நடமாடியுள்ளனர்.
இதன்போது யானையை அவதானித்த இருவரும் வெவ்வேறு திசைக்கு ஓடியபோதே விரிவுரையாளரை யானை தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கது.
Related posts:
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் வீதிகளைப் பொலிஸார் அடாத்தாகக் கையகப்படுத்துகின்றனர்: யாழ். ...
பாடசாலை முடிவடைந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஆசிரியையின் பத்துப் பவுண் தாலிக்கொடி அபகரிப்பு !
அரசாங்க ஊழியர்களின் கடன் சலுகைகள் நேற்றுடன் நிறைவு - அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்!
|
|