இளவாலையில்  20 இலட்சம் ரூபா பெறுமதியான  கேரளா கஞ்சா மீட்பு!

Tuesday, May 17th, 2016

யாழ். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை(17-05-2016) காலை வீடொன்றிலிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான பத்துக் கிலோ கேரளா கஞ்சா தம்மால் மீட்கப்பட்டுள்ளதாக இளவாலைப்  பொலிஸ் நிலையப்  பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஆர் சேனநாயக்க தெரிவித்தார்.

குறித்த கஞ்சாவினை வீட்டில் உடமையாக வைத்திருந்த குற்றச் சாட்டில்  48 வயதுடைய  குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக்  கிடைக்கப்பெற்ற இரகசியத் தகலொன்றின் அடிப்படையில் வீடொன்றினை சோதனையிட்ட போதே  மேற்படி அளவுள்ள  கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கேரளாக்  கஞ்சா இந்த வீட்டில் வைத்து  விற்பனை செய்யப்பட்டு வந்தததுடன் 6 பார்சல்களும்  பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.

Related posts: