சோளத்தின் விலையை அதிகரிக்க தீர்மானம்!
Monday, July 22nd, 2019தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சோள உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு அரசாங்கம் தற்போது பல உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
அதனடிப்படையில் 1 இலட்சம் ரூபாவை செலவிடும் சோள உற்பத்தியாளர்களுக்கு 60 ஆயிரம் ரூபாவை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்காக 3 ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மீண்டும் எதிரொலிக்ககும் 25,000 ?
டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை - சிவில் விமான சேவை அதிகார சபை!
பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் - அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி...
|
|