சோளத்தின் விலையை அதிகரிக்க தீர்மானம்!

Monday, July 22nd, 2019

தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சோள உற்பத்தியை மேற்கொள்பவர்களுக்கு அரசாங்கம் தற்போது பல உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

அதனடிப்படையில் 1 இலட்சம் ரூபாவை செலவிடும் சோள உற்பத்தியாளர்களுக்கு  60 ஆயிரம் ரூபாவை இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 3 ஆயிரம் குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: