இந்திய மீனவர்கள் 8 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் கைது!

Monday, December 17th, 2018

இந்திய மீனவர்கள் 8 பேர் காங்கேசன்துறை கடற்படையினரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்திய தமிழகம் இராமமேஸ்வரம் மற்றும் நாகபட்டினத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், ஒரு படகில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட போதே, படகின் இஞ்சின் பழுதடைந்த நிலையில், காங்கேசன்துறை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 8 மீனவர்களும், கடற்படையினரால், யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகள் 8 மீனவர்களையும் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர்;ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts:

புதிய சேவைப் பிரமாணக் குறிப்பினால் பாதிக்கப்பட்ட அதிபர்களுக்கு பதவியுயர்வு கல்வி அமைச்சு அறிவிப்பு!
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1500 ஐக் கடந்தது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவிப்பு...
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்றுமுதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு!