நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் வாகனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை!

Wednesday, April 28th, 2021

நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேருக்கும் விரைவில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்றும் தற்போது உள்ள வாகனங்களைப் பயன்படுத்தும்படியும் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் தற்சமயம் வாகனங்கள் தேவைப்படுவதாக பல மாதங்களாக ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்து வந்த நிலையில், அதற்கான அனுமதியை அவர் அளித்திருப்பதாக தகவல் கூறுகின்றது.

அதன்படி இலங்கை வங்கியின் ஊடாக வாகன இறக்குமதிக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க ஆவணங்கள் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: