தொடரும் கனமழை காரணமாக திருகோணமலையின் பல பகுதிகள் நீரில் மூழ்கின – மக்கள் பெரும் அசளகரியம்!

Monday, December 28th, 2020

தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக திருகோணமலை மாவட்டத்தின் திருமலை நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக திருகோணமலை நகரின் மட்கோ, பள்ளத்தோட்டம், உப்புவெளி, 3ஆம் கட்டை, அலஸ்தோட்டம், துவரங்காடு,கன்னியா ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன் திருகோணாமலை, நிலாவெளி பிரதான வீதியிலும் வெள்ள நீர் சடுதியாக அதிகரித்ததால் அவ்வீதியூடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

பல வீடுகளுக்குள் வெள்ளம் உட்புகுந்ததால், அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு பல வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பகுறிப்பிடத்தக்கது..

Related posts: