இலங்கைக்கு ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்குகிறது சீனா!
Saturday, February 6th, 2021சீனாவின் மத்திய வங்கி, இலங்கை மத்திய வங்கிக்கு ஆயிரத்து 500 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க தீர்மானித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி கையிருப்பு தட்டுப்பாட்டை முகாமைத்துவம் செய்வதற்காக குறுகிய காலத்தில் மீள செலுத்தும் வகையில் இந்த கடன் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிடம் குறுகிய காலத்தில் செலுத்தம் அடிப்படையில் பெற்றுக்கொண்ட 400 மில்லியன் டொலர்களை அரசாங்கம் திருப்பி செலுத்தியிருந்தது. இந்நிலைமையில் ஏற்பட்ட அந்நிய செலாவணியை கையிருப்பு தட்டுப்பாடானது, சீனாவின் ஆயிரத்து 500 மில்லியன் டொலர் கடன் மூலம் ஈடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்று முழு சந்திர கிரகணம் - 103 நிமிடங்கள் நீடிக்கும்!
கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி எச்சரிக்கை!
தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் வெற்றிடங்களை ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரே...
|
|