நாடு முழுவதும் ஆயுதப் படையினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு – சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு!

Tuesday, January 9th, 2024

நாடு முழுவதும் ஆயுதப் படைகளை வரவழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் பொது அமைதியைப் பேணுவதற்கான ஜனாதிபதியின் நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின்படி அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: