ரஷ்யாவுக்கு தபால் மூலம் பொருட்கள் – பொறுப்பேற்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானம்!
Tuesday, June 7th, 2022ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களை பொறுப்பேற்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
விமானப் பயண சிக்கல் காரணமாக ரஷ்யாவுக்கு அனுப்பப்படும் அஞ்சல் பொருட்களை தபால் அலுவலகங்களில் உள்ள கருமபீடங்களில் பொறுப்பேற்காமல் இருப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் இந்த சிக்கல் தற்போது தீர்க்கப்பட்டுவருகின்றது. அதேபோல் மாற்று பயணப் பாதை ஊடாக ரஷ்யாவுக்கு அஞ்சல் பொருட்களை அனுப்பி வைக்கும் சாத்தியம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
எனினும் பொறுப்பேற்கப்படும் அஞ்சல் பொருட்கள் சம்பந்தப்பட்ட அடைவிடத்திற்கு செல்ல தாமதமடையலாம் என்று தபால்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வடக்குகிழக்கில் போலிநியமனம் குறித்து விசாரணைக்கு உத்தரவு!
சட்டவிரோத சிறுநீரகத் தொகுதி வர்த்தகத்தில் ஈடுபட்ட குழு கைது!
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு - இலங்கை சுற்றுலா அபிவிர...
|
|