இரயில்வே திணைக்களத்தில் தற்போது 150 ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக தகவல்!

Thursday, November 2nd, 2023

இரயில்வே திணைக்களத்தில் தற்போது 150 ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக இரயில் போக்குவரத்தில் கடும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் சில ஓட்டுனர்கள் விடுமுறை இன்றி பணிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்ற போதும், இரயில் ஓட்டுனர்கள் பற்றாக்குறையானது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது

எவ்வாறாயினும், புதிய இரயில் ஓட்டுனர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டாலும், அவர்களை சரியான ஓட்டுநர்களாக மாற்றுவதற்கு சுமார் 4 வருடங்களாவது தேவைப்படுவதாகவும் ஹெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்து.

000

Related posts: