சமஷ்டி முறையை ஏற்படுத்த இடமளிக்கப் போவதில்லை – ஜனாதிபதி!
Monday, April 3rd, 2017
சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பான வரைவு ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்ட அறிஞர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
மாகாண முதலமைச்சர்களுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை அவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டை பிளவுப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வரைவு கூட இதுவரை தயாரிக்கப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டை பிளவுப்படுத்தவோ அல்லது சமஷ்டி முறையை ஏற்படுத்தவோ தான் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிவந்த வர்த்தக நிலையங்கள் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நடவடிக்கை!
வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு அதிபர்கள் சங்கம் கோரிக்கை!
அடுத்த பாடசாலை தவணைக்கு முன் 34 ஆயிரம் ஆசிரியர் நியமனங்கள் - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப...
|
|
|
பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் அதற்கான அனைத்து உதவிகளும் செய்யத்தயார் -! சுகாதார சேவை பணிப்பாளர்!
அதிக விலைக்கு அரிசி விற்றால் சட்ட நடவடிக்கையுடன் அதிகபட்ச அபராதம் - நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவ...
பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத்தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை -...


