அத்துமீறி சுகாதார அமைச்சில் நுழைந்த மேலும் இரு மாணவர்கள் கைது!
Monday, June 26th, 2017
பல்கலை மாணவர்கள் சுகாதார அமைச்சில் அத்துமீறி சொத்துக்களுக்கு சேதம் விலைவித்த சம்பவம் தொடர்பில் கலைப்பீட மாணவ சங்கத்தின் முன்னாள் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சியம்பலாண்டுவ – கொட்டியாகல பிரதேசத்தில் தனது வீட்டில் மறைந்திருந்த போது காவற்துறையால் நேற்று மாலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனுடன் இந்த சம்பவம் குறித்து கட்டான பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தம் சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் இணைப்பாளர் லஹிரு வீரசேகர உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
மீண்டும் தடைசெய்யப்பட்ட க்ளேபோசேட் இரசாயணம்!
யாழ்ப்பாணத்திலும் தாதியர்கள் போராட்டம்!
ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது - ஜனாதிபதி...
|
|