சுகாதார தொழிற்சங்கங்களுடன் ராஜித பேச்சுவார்த்தை!
Thursday, November 23rd, 2017
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும், தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
சுகாதார அமைச்சில் குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக, தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக நேரக் கொடுப்பனவு நிலுவை, சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து தாதியர் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்கள் 22 ஆம் திகதி காலை 07.00 மணி முதல், 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
தும்புசார் கைப்பணியாளர்களுக்கு விரைவில் தொழில் நுட்பப் பயிற்சி!
மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கும் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண...
அதிக வெப்பம் - 6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டது எச்சரிக்கை!
|
|