நாளைமுதல் கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை!
Friday, September 11th, 2020கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் குளிரூட்டப்பட்ட கடுகதி இரயில்சேவை நாளைமுதல் வாரநாட்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா காரணமாக கல்கிஸ்ஸையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிக்கும் கடுகதி இரயில்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கடுகதி இரயில்சேவை நாளை முதல் வாரநாட்களிலும் வழமைபோல் முன்னெடுக்கப்படவுள்ளதாக இரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
வறுமைக்கோட்டிற்கு உட்பட்டோரிற்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை - ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச!
நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
பேருந்து, ரயில் பயணிகளை சிவில் உடையில் பொலிஸார் கண்காணிப்பு!
|
|