திங்கள்முதல் ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்!

Saturday, July 3rd, 2021

ஆட்பதிவுத் திணைக்களம் எதிர்வரும் 5 ஆம் திகதி திங்கள்முதல் பொது மக்களுக்கான தனது சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது..

எவ்வாறாயினும் இச்சேவைகள் முன் பதிவு செய்த குறிப்பிட்ட எண்ணிக்கையானோருக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இதன்படி தமது தேசிய அடையாள அட்டைகளை பெறும் நோக்கத்துக்காக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் அலுவலகத்துக்கு வருவதற்கு முன் ஒரு திகதியையும் இலக்கத்தையும் ஒதுக்குவது கட்டாயமாகும்.

முன்பதிவு செய்ய விரும்புவோர் ஆட்பதிவுத் திணைக்களத்தின் உப அலுவலகங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இம்முறை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையினை 10 சதவீதத்தினால் அதிகரிப்பு...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேடமாக நாடாளுமன்றம் கூட்டப்படாது - ...
யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனா தொற்று மரணமொன்று பதிவு - பணிப்பாளர் சத்தியமூர்த்தி...