பொலிஸார் மீது வாள்வெட்டு: ஊர்காவற்றுறையில் சம்பவம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/05/images-8.jpg)
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நாரந்தனைப் பகுதியில் வைத்து வாள்வெட்டுக்குள்ளானார் என தெரிவிக்கப்படுகின்றது.
வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது இன்று முற்பகல் வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரே, குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்தினார்” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Related posts:
நாட்டின் அபிவிருத்திக்கு உதவித் தொகையை அதிகரித்தது இந்தியா!
பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யுங்கள் - வட மாகாண சமுத...
வருடம் முழுவதும் தடையின்றி எரிபொருளை வழங்க தேவைப்படும் பெருந்தொகை டொலரை பெறுவது தொடர்பில் விசேட ஆலோச...
|
|