மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு கோரிக்கை!

Friday, October 30th, 2020

இரண்டாம் தவணை விடுமுறைகள் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை மேற்கொள்வதற்காக சுகாதார பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார அணுகுமுறைகள் குறித்த எழுத்து மூல பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கிடையில் இணையவழிக் கற்பித்தல் தொடர்பான மேற்பார்வை ஒன்றை செய்தவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதி இன்மை காரணமாக இந்த மேற்பார்வையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பலாலிவிமான நிலையம் மயிலிட்டித் துறைமுகத்தின் விஸ்தரிப்புப் பணிகளுக்காகப் பொதுமக்களின் நிலங்களைச் சு...
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தொழிநுட்ப பிரிவு மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு உள்நாட்டுக்கு காரணங்கள் எதுவுமில்லை - பாத...