மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சிடம் கல்வி அமைச்சு கோரிக்கை!
Friday, October 30th, 2020இரண்டாம் தவணை விடுமுறைகள் முடிவடையவுள்ள நிலையில், மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து பரிசீலனை மேற்கொள்வதற்காக சுகாதார பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளன.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான சுகாதார அணுகுமுறைகள் குறித்த எழுத்து மூல பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையில் இணையவழிக் கற்பித்தல் தொடர்பான மேற்பார்வை ஒன்றை செய்தவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அனைத்து மாணவர்களுக்கும் இணைய வசதி இன்மை காரணமாக இந்த மேற்பார்வையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உயர் தர பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு வெளியானது
தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு நியாயமான தீர்ப்பை வழங்கக்கூடிய திட்டத்தை நோக்கி ஒன்றுபட வேண்டும...
சிங்கப்பூரின் ஒன்பதாவது ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்தினம் நாளை பதவியேற்பு!
|
|