மண்டைதீவிலும் 150 பயனாளர்களுக்கு தென்னம் பன்றகள் விநியோகம் – தீவகத்தில் பசுமையை ஏற்படுத்த சிறீன்லேயர் அமைப்பின் தொடர்ந்தும் நடவடிக்கை!

Friday, February 10th, 2023

மண்டைதீவில் தெரிவுசெய்யப்பட்ட 150 பயனாளர்களுக்கு சிறீன்லேயர் (greenlayer) தன்னார்வ அமைப்பு தென்னம் பிள்ளைகளை வழங்கியுள்ளது.

தீவகத்தில் பசுமையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கடன் குறித்த நிறுவத்தால் தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட பயன் தரும் மரங்கள் நடுகைசெய்யப்பட்டு வருகின்றன.

இதன் ஓர் அங்கமாக மண்டைதீவில் தெரிவுசெய்யப்பட்ட 150 பயனாளர்களுக்கு தலா 2 வீதம் 300 தென்னம் பிள்ளைகளை வீதம் நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது

குறித்த நிகழ்வில் வேலணை பிரதேச செயலர் சிவகரன் கலந்துகொண்டு குறித்த மரக்கன்றுகளை வழங்கிவைத்திருந்ததுடன் குறித்த பகுதிக்கான J-7, J-8, J-9 ஆகிய கிராம உத்தியோகத்தர்களும் பிரதேச செயலக ஊழியர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: