தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவு – தேர்தல்கள் ஆணையாளர்!

Sunday, September 1st, 2019


ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு நீதிமன்றத்திலிருந்து உத்தரவொன்று கிடைக்க பெற்றால் அதனை நடத்தவேண்டி நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்த கூடிய சட்டம் என்ன என்பது தொடர்பிலான உரிய தீர்வு இன்னும் கிடைக்க பெறவில்லை. அதன் காரணமாக அதனை நடத்த முடியாது என்றே கூற வேண்டியுள்ளது.

எனினும் அதனை நடத்துமாறு உயர் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் மாகாண சபை தேர்தல்களை நடத்தியே ஆக வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

Related posts:

மாகாண சபைகளை மாகாண அரசு என்று அழைக்கக்கூடாது அரசமைப்பில்கூட அப்படி இல்லை என்கிறார் மைத்திரி!
சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்றுமுதல் வழமைக்கு திரும்பின - பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட ம...
அனைவரும் புத்தாண்டை மிகுந்த அர்ப்பணிப்புடன் எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு...

நாளாந்தம் 10 ஆயிரம் பேர் வெவ்வேறு அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கின்றனர் - சுகாதார அமைச்சு சுட்டிக்கா...
இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வந்தது அவசரகால நிலை – கடந்த நள்ளிரவுமுதல் நடைமுறையாகும் வகையில் அதி...
மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்படும்!