திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு திங்கள்முதல் அனுமதி – இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
Sunday, January 9th, 2022எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமைமுதல் திட்டமிடப்பட்ட மின் தடைகளுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் திங்கட்கிழமைமுதல் ஒரு மணித்தியாலம்முதல் இரண்டு மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் கோரிக்கையினை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எரிசக்தி அமைச்சினால் வழங்கப்பட வேண்டிய எரிபொருள் வழங்கப்படாமை மற்றம் களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதி மற்றும் பொலிஸ்மா அதிபர்கள் சந்திப்பு!
இலங்கையின் 23 ஆவது இராணுவ தளபதி இன்று நியமனம்?
பெப்ரவரிமுதல் பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் – தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையில...
|
|