அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை வழங்கக் கூடாது – கிளிநொச்சி காணி சீர்த்திருத்த ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உத்தரவு!

Friday, December 18th, 2020

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தெரிவிக்காமல் காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்ற திட்டவட்டமான அறிவுறுத்தலை கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பூநகரிப் பகுதியில் உள்ள எல்ஆர்சி காணிகளை அரசாங்க அதிகாரிகள் பணம் பெற்று வழங்கியதாக அமைச்சருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குறித்த உத்தரவை அமைச்சர் வழங்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாது வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட விவசாயத்தை நம்பி வாழும்  குடும்பங்களுக்கு விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள குறித்த காணிகள் வெகுவிரைவில் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களை மேலும் கௌரவிக்க கொள்கை ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் தேவ...
பனை சார் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்களும் பிரச்சினைகளும் துறைசார் அமைச்சர் ரமேஸ் பத்திரனவுடன் இணை...
அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு - நிறைவுக்கு வந்தது கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!

எமது அரசியல் கொள்கைக்குள் பிரிவினைக்கு இடமில்லை - டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிக்காட்டு!
இலங்கைக்கான பிரான்ஸ் துாதுவர் – அமைச்சர் டக்ளஸ் விசேட சந்திப்பு - கடற்றொழில்சார் செயற்பாடுகளுக்கு பி...
யாழ். பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டது குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறை - திறந்துவைத்தார...