யாழ். பேருந்து தரிப்பிடத்தில் அமைக்கப்பட்டது குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறை – திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, June 22nd, 2023

யாழ். பேருந்து தரிப்பிடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான தாய்ப்பால் ஊட்டும் அறையினை திறந்து வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பேருந்து நிலையத்தை அண்டியுள்ள விற்பனை நிலையங்கள், கழிவு வாய்க்கால்கள் மற்றும் மலசல கூடம் என்பவற்றையும் பார்வையிட்டதுடன், அவற்றை சுகாதார முறைப்படி பேண வேண்டிய அவசியத்தையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்

இதனிடையே யாழ் பேருந்து நிலையம் மற்றும் சூழவுள்ள வர்த்தக நிலையங்களுக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரி ஆகியோரை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து, தன்னால் அவதானிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக பிரஸ்தாபித்தார்.

Related posts:

உள்ளூராட்சி தேர்தலை மக்கள் உரிய முறையில் பயன் படுத்தினால் நிச்சயம் எம்மால் சாதித்துக்காட்ட முடியும் ...
மக்களின் ஒளிமயமான வாழ்வுக்காக ஒற்றுமையாக செயற்பட வேண்டும் -சித்திரைப் புத்தாண்டுவாழ்த்துச் செய்தியில...
நாட்டில் பதற்றங்கள் ஏற்படவேண்டும் என்ற கொள்கையிலேயே பலரும் இருக்கின்றீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எ...

தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே வழி முறைகள் அமையவேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
'யானைக்கு தும்பிக்கையாக இருப்பவர்கள் வாக்களித்த எமது மக்களுக்கு நம்பிக்கையாக இல்லை” – டக்ளஸ் எம்.பி...
கோட்டபயவின் வெற்றியில் உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்: மறவன்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி ...